- அதானி குற்றவாளி என்றால் பிரதமர் மோடியும் குற்றவாளி தான்.
- இவ்வளவு பெரிய ஊழலை தட்டிக்கேட்ட ஒரே இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம் தான்.
தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா, தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பேசும் போது கூறியதாவது:-
அதானி விவகாரத்தில் ரூ.10 லட்சம் கோடி முறைகேடு நடந்தது குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பினர். பா.ஜனதா எம்.பி.க்கள் 350 பேர் காவி துண்டு போட்டுகிட்டு உட்கார்ந்து இருந்தார்கள். நாங்கள் 39 பேர் கருப்பு சட்டை போட்டு கிட்டு கேள்விகளால் துளைத்தெடுத்தோம்.
அவர்களால் பதில் அளிக்க முடியவில்லை. அமலாக்க துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறை ஆகியவற்றுக்கு பயந்து மம்தா பானர்ஜி, சந்திரசேகரராவ், ஜெகன்மோகன் ரெட்டி, ஒடிசா, பஞ்சாப் முதல்-மந்திரிகள் யாரும் பேசவில்லை. இவ்வளவு பெரிய ஊழலை தட்டிக்கேட்ட ஒரே இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம் தான்.
அதானி குற்றவாளி என்றால் பிரதமர் மோடியும் குற்றவாளி தான். இதை கூறியதற்காக கூட என் மீது வழக்கு தொடர்ந்து தண்டனை வாங்கி கொடுத்து என்னுடைய பதவியை பறித்தாலும் பரவாயில்லை. நான் சிறைக்கு செல்லவும் தயாராக உள்ளேன்.