தமிழ்நாடு

கஜினி முகமது போல் எத்தனை முறை மோடி தமிழ்நாட்டுக்கு வந்தாலும்.. செல்லூர் ராஜு

Published On 2024-03-07 11:33 GMT   |   Update On 2024-03-07 11:43 GMT
  • அரசியல் இயக்கத்தில் மதம் கலக்க கூடாது. பாஜக ஒரு மதத்தை முன்னோக்கி எடுத்து செல்கிறது
  • அதிமுகவுக்கு ஓட்டு போடும் மக்களை ஏமாற்ற பிரதமர் மோடி முயற்சிக்கிறார் என்று செல்லூர் ராஜு தெரிவித்தார்.

மதுரையில் அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்த பின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அதில், பிரதமர் மோடி நன்றாக நடிக்கிறார். அவர்கள் கட்சி தலைவர்களான வாஜ்பாய், அத்வானிக்கு மாற்றாக அதிமுக தலைவர்களின் புகழை பாடுகிறார். அதிமுகவுக்கு ஓட்டு போடும் மக்களை ஏமாற்ற மோடி முயற்சிக்கிறார். கஜினி முகமது போல பிரதமர் மோடி எத்தனை முறை தமிழ்நாட்டுக்கு படையெடுத்தாலும் சரி, மக்கள் ஏற்க மாட்டார்கள்.

அரசியல் இயக்கத்தில் மதம் கலக்க கூடாது. பாஜக ஒரு மதத்தை முன்னோக்கி எடுத்து செல்கிறது. அதை தமிழக மக்கள் எப்போதும் ஏற்க மாட்டார்கள். ராமர் கோயில் கட்டுவதை குறை சொல்லவில்லை. அதை மக்கள் மத்தியில் பிரச்சாரமாக எடுத்து செல்ல கூடாது. பாஜக எவ்வளவு உருண்டாலும் அவர்களை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்.

எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் ஒரு அரசியல் நாடகம் தான். தமிழ்நாட்டுக்கு இத்தனை முறை வந்த பிரதமர் ஏன் இந்த கட்டுமானம் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவேயில்லை. எப்படியாவது மருத்துவமனையை கட்டி முடித்தால் சரி தான் என் அவர் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் 'என் மண், என் மக்கள்' யாத்திரை நிறைவு விழா கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, முன்னாள் முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை புகழ்ந்து பேசினார்.

இதனை அடுத்து, புதுச்சேரியில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் படங்களுடன் பிரதமர் மோடி, அமித்ஷா, முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோரின் படங்களுடன், வாக்களிப்போம் தாமரைக்கே என பாஜகவினர் போஸ்டர் ஒட்டியிருந்தது பரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News