தமிழ்நாடு செய்திகள்

வளர்ந்த தமிழ்நாடு உருவாக தி.மு.க. தடையாக உள்ளது - பா.ஜ.க. தேசிய செய்தி தொடர்பாளர் குற்றச்சாட்டு

Published On 2026-02-11 10:29 IST   |   Update On 2026-02-11 10:29:00 IST
  • பா.ஜ.க. அரசு கடந்த 11 ஆண்டுகளில் 26 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுத்துள்ளது.
  • டி.என்.பி.எஸ்.சி. தேர்வைக் கூட முறையாக நடத்த முடியாத நிலையில் தி.மு.க. அரசு உள்ளது.

கோவை:

பா.ஜ.க. தேசிய செய்தி தொடர்பாளர் சி.ஆர். கேசவன் கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

பா.ஜ.க. அரசு கடந்த 11 ஆண்டுகளில் 26 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுத்துள்ளது. மேலும் அரசின் நலத்திட்டங்களில் தவறான பயனாளர்களுக்கு சென்று கொண்டிருந்த சுமார் 10 கோடி பேருக்கான நிதி தடுக்கப்பட்டு, தகுதியான பயனாளர்களுக்கு கொண்டு சேர்க்கப்பட்டு உள்ளது.

கடந்த 11 ஆண்டுகளில் மத்திய அரசு மூலமாக தமிழகத்துக்கு பல்வேறு வளர்ச்சித்திட்டங்களுக்கு ரூ.6.50 லட்சம் கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு மலிவான விலையில் மருந்துகளை மக்களுக்கு வழங்கி வருகிறது. அதற்கு மாறாக தி.மு.க. அரசு மலிவான மதுவை மக்களுக்கு வழங்கி வருகிறது.

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி. தேர்வைக் கூட முறையாக நடத்த முடியாத நிலையில் தி.மு.க. அரசு உள்ளது. வளர்ந்த இந்தியா வேண்டுமென்றால் வளர்ந்த தமிழ்நாடு அவசியம். ஆனால் வளர்ந்த தமிழ்நாடு உருவாக தி.மு.க. அரசு தடையாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News