தமிழ்நாடு செய்திகள்

மாமல்லபுரம் அருகே இன்று முதலமைச்சர் தலைமையில் தி.மு.க. வாக்குச்சாவடி முகவர் மாநாடு

Published On 2026-02-11 09:15 IST   |   Update On 2026-02-11 09:15:00 IST
  • மாநாட்டில் 1,50,000-க்கும் மேற்பட்ட பி.எல்.ஏ.-2. பி.எல்.சி., பி.டி.ஏ., பி.ஒய்.ஓ. வாக்குச்சாவடி முகவர்கள் பங்கேற்கிறார்கள்.
  • காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. முன்னின்று இந்த மாபெரும் மாநாட்டை நடத்துகிறது.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தை அடுத்த திருவிடந்தையில் இன்று மாலை சென்னை விழுப்புரம் மண்டல "என் வாக்குச் சாவடி! வெற்றி வாக்குச் சாவடி!" மாபெரும் மாநாடு நடைபெறுகிறது. இதில் 1,50,000-க்கும் மேற்பட்ட பி.எல்.ஏ.-2. பி.எல்.சி., பி.டி.ஏ., பி.ஒய்.ஓ. வாக்குச்சாவடி முகவர்கள் பங்கேற்கிறார்கள்.

பிரமாண்டமாக நடைபெறும் இந்த மாநாட்டில் தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று எழுச்சி உரையாற்றுகிறார்.

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. முன்னின்று இந்த மாபெரும் மாநாட்டை நடத்துகிறது. பார்ப்போர் அனைவரும் வியக்கும் வகையில் மிகவும் பிரம்மாண்டமான மேடை அமைத்து, சுமார் 10 லட்சம் சதுர அடி பரப்பளவில் மிகவும் எழுச்சியுடன் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மிகவும் கோலாகலமாக நடைபெற உள்ள இந்த மாபெரும் மண்டல மாநாட்டில் திராவிட மாடல் நல்லாட்சி நாயகர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று வாக்குச்சாவடி குழுவினருக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் எழுச்சியுரையாற்றுகிறார்.

Tags:    

Similar News