தமிழ்நாடு

ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தம் வாபஸ்

Published On 2024-02-14 09:22 GMT   |   Update On 2024-02-14 09:22 GMT
  • பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் 26-ந்தேதி முதல் திட்டமிட்டபடி காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

சென்னை:

பழைய ஓய்வு ஊதியம் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வருகிற 26-ந்தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர்.

இதுதொடர்பாக பேச்சுவார்த்தை அமைச்சர் எ.வ.வேலு அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் 26-ந்தேதி முதல் திட்டமிட்டபடி காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அடையாள வேலைநிறுத்தம் நாளை (பிப்.15) நடைபெறும் என்றும் ஜாக்டோ ஜியோ அறிவித்து இருந்தது.

இந்நிலையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நாளை நடத்த இருந்த ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News