தமிழ்நாடு செய்திகள்

அதிமுக இரண்டாக உடையவில்லை... நான்காக உடைந்துள்ளது- ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

Published On 2023-01-23 15:04 IST   |   Update On 2023-01-23 15:04:00 IST
  • ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் கமல்ஹாசனை சந்தித்து பேசினார்.
  • கடந்த சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் 10 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் வாங்கியது.

சென்னை:

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் கமல்ஹாசனை சந்தித்து பேசினார்.

இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

* ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஆதரவு குறித்து நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து கமல் அறிவிப்பார்.

* அதிமுக இரண்டாக உடையவில்லை, நான்காக உடைந்துள்ளது.

* கடந்த சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் 10 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் வாங்கியது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News