செய்திகள்

ரஜினிகாந்தின் கருத்து மகிழ்ச்சி அளிக்கிறது- இல.கணேசன் பேட்டி

Published On 2019-04-12 05:15 GMT   |   Update On 2019-04-12 05:15 GMT
பாரதிய ஜனதா தேர்தல் அறிக்கை குறித்த ரஜினிகாந்தின் கருத்து மகிழ்ச்சி அளிக்கிறது என்று இல.கணேசன் தெரிவித்தார். #Loksabhaelections2019 #BJP #LaGanesan #Rajinikanth
நாகர்கோவில்:

கன்னியாகுமரி தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து இல.கணேசன் எம்.பி. நாகர்கோவிலில் நேற்று பிரசாரம் செய்தார்.

முன்னதாக இல.கணேசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கை விவசாயிகள் மற்றும் ஏழை மக்கள் பயன்பெறும் வகையிலும், பயங்கரவாதத்தை அழிக்கும் வகையிலும் இருக்கிறது.

ஆனால் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை பயங்கரவாதத்திற்கு இடம் அளிக்கும் வகையில் உள்ளது. கி.வீரமணி இந்து கடவுளை அவதூறாக பேசியதை மூடி மறைக்கும் வகையில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பதில் அளிக்கிறார்.

கடந்த தேர்தலிலேயே காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சிக்கான அந்தஸ்தை இழந்து விட்டது. இந்த தேர்தலில் நாடு முழுவதும் 40 தொகுதிகளில் வெற்றி பெறுவதே காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சவாலாக இருக்கும்.

தன்னை கொல்ல சதி நடப்பதாக ராகுல் மலிவான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஸ்டாலினின் பேச்சுக்கள் பண்பில்லாதவை. போலித்தனமாவை. தற்போது கண்ணியம் என்பது பிரசாரத்தில் இல்லாமலே போய் விட்டது. பாரதிய ஜனதா தேர்தல் அறிக்கை குறித்த ரஜினியின் கருத்து மகிழ்ச்சி அளிக்கிறது.

தமிழகம் மற்றும் புதுவையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி 40 தொகுதிகளையும் கைப்பற்றும். தமிழகத்தில் பா.ஜனதா போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார். #Loksabhaelections2019 #BJP #LaGanesan #Rajinikanth
Tags:    

Similar News