செய்திகள்
கோயம்பேடு மார்க்கெட்டில் இளம்பெண் படுகொலை
ஆட்கள் நடமாட்டம் மிகுந்த கோயம்பேடு மார்க்கெட்டில் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போரூர்:
கோயம்பேடு பூ மார்க்கெட்டில் உள்ள கடை முன்பு நேற்று நள்ளிரவு பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் கோயம்பேடு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் மற்றும் போலீசார் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையுண்ட பெண்ணுக்கு சுமார் 25 வயது இருக்கும். அவர் யார்? எந்தப் பகுதியை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. அவரது கழுத்து மட்டும் கத்தியால் அறுக்கப்பட்டு இருந்தது. மற்ற இடங்களில் காயம் இல்லை.
இறந்து கிடந்த பெண் இரவு 10 மணி அளவில் ஆண் ஒருவருடன் அமர்ந்து அங்கு பிரியாணி சாப்பிட்டதை அவ்வழியே சென்ற தொழிலாளர்கள் சிலர் பார்த்து உள்ளனர்.
காதல் விவகாரம் காரணமாக பெண் கொலை செய்யப்பட்டாரா? என்கிற கோணத்தில் போலீசார், விசாரணையை தொடங்கி உள்ளனர். அந்த பகுதியில் உள்ள கடைகளில் பொருத்தி இருக்கும் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் கோயம்பேடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மாயமானவர்கள் பற்றிய விவரத்தையும் சேகரித்து வருகின்றனர்.
கோயம்பேடு பூ மார்க்கெட்டில் உள்ள கடை முன்பு நேற்று நள்ளிரவு பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் கோயம்பேடு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் மற்றும் போலீசார் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையுண்ட பெண்ணுக்கு சுமார் 25 வயது இருக்கும். அவர் யார்? எந்தப் பகுதியை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. அவரது கழுத்து மட்டும் கத்தியால் அறுக்கப்பட்டு இருந்தது. மற்ற இடங்களில் காயம் இல்லை.
இறந்து கிடந்த பெண் இரவு 10 மணி அளவில் ஆண் ஒருவருடன் அமர்ந்து அங்கு பிரியாணி சாப்பிட்டதை அவ்வழியே சென்ற தொழிலாளர்கள் சிலர் பார்த்து உள்ளனர்.
காதல் விவகாரம் காரணமாக பெண் கொலை செய்யப்பட்டாரா? என்கிற கோணத்தில் போலீசார், விசாரணையை தொடங்கி உள்ளனர். அந்த பகுதியில் உள்ள கடைகளில் பொருத்தி இருக்கும் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் கோயம்பேடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மாயமானவர்கள் பற்றிய விவரத்தையும் சேகரித்து வருகின்றனர்.