தமிழ்நாடு செய்திகள்

அண்ணன், தம்பி போல் நானும் அண்ணன் எடப்பாடியும்... டிடிவி தினகரன்

Published On 2026-01-23 19:09 IST   |   Update On 2026-01-23 19:09:00 IST
  • எங்களுக்குள் இருந்த குடும்ப பிரச்சனை, கட்சி பிரச்சனை, அதனை மறந்து ஒன்றிணைந்துள்ளோம்.
  • அம்மாவின் ஆட்சியை மீண்டும் கொண்டுவர நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.

மதுராந்தகத்தில் பொதுக்கூட்டம் நிறைவடைந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

டிடிவி தினகரன் கூறியதாவது:-

எங்களுக்குள் இருந்த குடும்ப பிரச்சனை, கட்சி பிரச்சனை, அதனை மறந்து ஒன்றிணைந்துள்ளோம். நானும் எடப்பாடி பழனிசாமியும் முன்பு எப்படி இருந்தோமோ அதோபோல் ஒன்றிணைந்துவிட்டோம். எப்போதும்போல் அண்ணன், தம்பி போல் நானும் அண்ணன் எடப்பாடி பழனிசாமியும் செயல்படுவோம். அம்மாவின் ஆட்சியை மீண்டும் கொண்டுவர நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.

எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை இருக்கிறது. திமுக பற்றி விமர்சித்து பேசிய வைகோ மீண்டும் திமுக உடன் கூட்டணி வைத்துள்ளாரே அதைப்பற்றி யாரும் பேசுவதில்லை. புதிய கட்சிகள் கூட்டணிக்கு வரும்போது நிச்சயம் தெரிவிப்போம்.

அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் நிச்சயம் ஆட்சி மாற்றம் வரும், அதிமுக தலைமையில் ஆட்சி அமையும்.

Tags:    

Similar News