செய்திகள்
உசிலம்பட்டியில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு- போலீஸ்காரர் தற்கொலை
உசிலம்பட்டியில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் தூக்குப்போட்டு போலீஸ்காரர் தற்கொலை செய்தார்.
உசிலம்பட்டி:
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள நக்கலப்பட்டியைச் சேர்ந்தவர் வனராஜா. இவரது மகன் சதீஷ் (வயது 27).
இவர் பழனி போலீஸ் பட்டாலியனில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார். சதீஷ், ஒரு பெண்ணை காதலித்து வந்தார்.
அதனை வீட்டில் கூறி திருமணத்திற்கு சம்மதம் கேட்டார். ஆனால் அவரது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் சதீஷ் அதிர்ச்சி அடைந்தார். இருப்பினும் மனம் தளராமல் வீட்டில் பேசினார். ஆனால் காதலுக்கு பெற்றோர் சம்மதம் தரவில்லை.
இதனால் சதீஷ் மனவேதனைஅடைந்தார். நேற்று அவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வாழ்க்கையில் வெறுப்படைந்த சதீஷ், வீட்டின் விட்டதில் போர்வையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். உறவினர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
உசிலம்பட்டி தாலுகா போலீசார் விரைந்து சென்று சதீஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள நக்கலப்பட்டியைச் சேர்ந்தவர் வனராஜா. இவரது மகன் சதீஷ் (வயது 27).
இவர் பழனி போலீஸ் பட்டாலியனில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார். சதீஷ், ஒரு பெண்ணை காதலித்து வந்தார்.
அதனை வீட்டில் கூறி திருமணத்திற்கு சம்மதம் கேட்டார். ஆனால் அவரது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் சதீஷ் அதிர்ச்சி அடைந்தார். இருப்பினும் மனம் தளராமல் வீட்டில் பேசினார். ஆனால் காதலுக்கு பெற்றோர் சம்மதம் தரவில்லை.
இதனால் சதீஷ் மனவேதனைஅடைந்தார். நேற்று அவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வாழ்க்கையில் வெறுப்படைந்த சதீஷ், வீட்டின் விட்டதில் போர்வையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். உறவினர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
உசிலம்பட்டி தாலுகா போலீசார் விரைந்து சென்று சதீஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.