செய்திகள்
சென்னை வந்த விமானத்தில் ரூ.38 லட்சம் மதிப்புள்ள தங்கக் கட்டிகள் கடத்தல்
மலேசியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ரூ.38 லட்சம் மதிப்புள்ள தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் இது குறித்து வாலிபர் மற்றும் ஊழியரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.#ChennaiAirport
ஆலந்தூர்:
மலேசியாவில் இருந்து நேற்று இரவு சென்னைக்கு விமானம் ஒன்று வந்தது. அதிலிருந்து இறங்கிய பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர்.
அப்போது வாலிபர் ஒருவர் தனது பையை விமான நிலைய தற்காலிக ஊழியரிடம் கொடுத்தார். அந்த பையை விமான நிலையத்தின் வெளியே வந்து அந்த வாலிபரிடம் ஊழியர் கொடுத்தார்.
இதை கண்காணித்த அதிகாரிகள் 2 பேரையும் பிடித்தனர். பையை சோதனை செய்தபோது அதில் 1.2 கிலோ தங்கக் கட்டிகள் இருந்தது. இதன் மதிப்பு ரூ38 லட்சம் ஆகும்.
விசாரணையில் அந்த வாலிபர் சென்னையைச் சேர்ந்த விக்னேஷ் என்பது தெரியவந்தது. அவரிடமும், விமான நிலைய ஊழியரிடமும் விசாரணை நடந்து வருகிறது. #ChennaiAirport
மலேசியாவில் இருந்து நேற்று இரவு சென்னைக்கு விமானம் ஒன்று வந்தது. அதிலிருந்து இறங்கிய பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர்.
அப்போது வாலிபர் ஒருவர் தனது பையை விமான நிலைய தற்காலிக ஊழியரிடம் கொடுத்தார். அந்த பையை விமான நிலையத்தின் வெளியே வந்து அந்த வாலிபரிடம் ஊழியர் கொடுத்தார்.
இதை கண்காணித்த அதிகாரிகள் 2 பேரையும் பிடித்தனர். பையை சோதனை செய்தபோது அதில் 1.2 கிலோ தங்கக் கட்டிகள் இருந்தது. இதன் மதிப்பு ரூ38 லட்சம் ஆகும்.
விசாரணையில் அந்த வாலிபர் சென்னையைச் சேர்ந்த விக்னேஷ் என்பது தெரியவந்தது. அவரிடமும், விமான நிலைய ஊழியரிடமும் விசாரணை நடந்து வருகிறது. #ChennaiAirport