செய்திகள்

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பா.ஜனதா அரசு மக்களை ஏமாற்றுகிறது- திருநாவுக்கரசர்

Published On 2018-10-20 10:25 GMT   |   Update On 2018-10-20 10:25 GMT
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பா.ஜனதா அரசு மக்களை ஏமாற்றி விட்டது என திருநாவுக்கரசர் கூறினார். #thirunavukkarasar #bjp

காளையார்கோவில்:

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் இன்று காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் மற்றும் தேர்தல் அறிக்கை குறித்த கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.

கட்சியின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார். முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், கார்த்தி ப.சிதம்பரம், எம்.எல்.ஏ.க்கள் ராமசாமி, மலேசியா பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு மக்களிடம் அதிகளவில் வாக்குறுதிகளை கொடுத்து அதை செயல்படுத்தாமல் உள்ளது. ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் வேலை வாய்ப்பு வழங்குவோம், அனைத்து வங்கி கணக்குகளிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும், விலைவாசியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பல்வேறு வாக்குறுதிகளை அளித்தனர்.

ஆனால் இதனை எல்லாம் நிறைவேற்றாமல் மோடி அரசு மக்களை ஏமாற்றி விட்டது. விலைவாசியால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாங்கள் ஆட்சிக்கு வரமாட்டோம் என நினைத்து அதிக வாக்குறுதியை அளித்தோம் என மத்திய மந்திரி நிதின் கட்கரியே கூறியுள்ளார். தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க லட்சியத்தோடு பணி புரிய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து ப.சிதம்பரம் மாநிலம் முழுவதிலும் இருந்து வந்திருந்த நிர்வாகிகளிடம் கருத்துக்களை கேட்டார். #thirunavukkarasar #bjp

Tags:    

Similar News