செய்திகள்
அரசு பஸ் கவிழ்ந்து கிடந்த காட்சி.

நாட்டறம்பள்ளி அருகே அரசு பஸ் கவிழ்ந்து விபத்து- 27 பேர் படுகாயம்

Published On 2018-05-18 09:29 GMT   |   Update On 2018-05-18 09:29 GMT
நாட்டறம்பள்ளி அருகே அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 27 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாட்டறம்பள்ளி:

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு கிருஷ்ணகிரிக்கு இன்று காலை அரசு பஸ் புறப்பட்டது. கிருஷ்ணகிரியை சேர்ந்த டிரைவர் செல்வம் (வயது 37) பஸ்சை ஓட்டிச் சென்றார்.

வாணியம்பாடி தாண்டி நாட்டறம்பள்ளி அருகே அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் தறிகெட்டு ஓடியது.

சாலையின் ஓரத்தில் இருந்த தடுப்பு கம்பியை உடைத்து 25 அடி பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்தது. அதிகாலை நேரம் என்பதால் பஸ்சில் பயணிகள் தூக்க கலக்கத்தில் இருந்தனர். அவர்கள் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்ததை பார்த்து அலறி கூச்சலிட்டனர். 27 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த நாட்டறம்பள்ளி போலீசார் பொதுமக்கள் உதவியுடன் பஸ்சின் ஈடுபாடுகளில் சிக்கிய பயணிகளை மீட்டு நாட்டறம்பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
Tags:    

Similar News