செய்திகள்

வேதாரண்யம் அருகே பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபர் கைது

Published On 2017-04-12 16:42 IST   |   Update On 2017-04-12 16:42:00 IST
வேதாரண்யம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் அருகே உள்ள செம்போடை கிராமத்தை சேர்ந்த 25 வயது மாற்றுதிறனாளி பெண்ணை அவரது பெற்றோர் வீட்டில் தனியாக விட்டு விட்டு வேலைக்கு சென்று விடுவார்கள்.

இதனை கவனித்த செம்போடை மகராஜபுரத்தை சேர்ந்த பொன்னுசாமி மகன் விஜயகாந்த் (26) வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட அப் பெண் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசி வழக்குபதிவு செய்து விஜயகாந்தை கைது செய்தார்.

Similar News