செய்திகள்

நாகை-வேளாங்கண்ணி பகுதியில் சாலைகளில் சுற்றி திரிந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மீட்பு

Published On 2017-04-07 22:20 IST   |   Update On 2017-04-07 22:20:00 IST
நாகை, வேதாரண்யம், வேளாங்கண்ணி ஆகிய பகுதி சாலைகளில் சுற்றிதிரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட 10 பேர் மீட்கப்பட்டு சீர்காழியில் உள்ள மனநல மறுவாழ்வு பயிற்சி மையத்தில் சேர்க்கப்பட்டனர்.

சீர்காழி:

சீர்காழி திட்டையில் செயல்படும் கார்டன் மனநல மறுவாழ்வு மையத்தின் நிர்வாகி ஜெயந்தி உதயக்குமார் மனவியலாளர் ராஜ்குமார், மனநல சமூக பணியாளர் ஜான், கவுதமி, செவிலியர் கொண்ட குழுவினர் மற்றும் மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன் ஆகியோர் போலீசாருடன் இணைந்து நாகை, வேதாரண்யம், கோடியக்கரை, வேளாங்கண்ணி பகுதி சாலைகளில் சுற்றிதிரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட 6 ஆண்கள், 4 பெண்களை மீட்டு மனநல மறுவாழ்வு மையத்திற்கு கொண்டு வந்தனர்.

இவர்களில் 4 பேர் தமிழகத்தையும், 6 பேர் வெளி மாநிலங்களையும் சேர்ந்தவர்கள். மீட்கப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கார்டன் மனநல மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை மற்றும் மனநல மறுவாழ்வுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது.

பயிற்சிக்கு பிறகு பாதிக்கப்பட்டவர் தங்கள் விவரங்களை கூறும் பட்சத்தில் சென்னையில் உள்ள மாநில குற்ற ஆவண காப்பகம் உதவியுடன் அவர்களது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என கூறினர்.

Similar News