டென்னிஸ்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் ஜெசிகா பெகுலா, பவுலினி அதிர்ச்சி தோல்வி

Published On 2025-04-28 01:14 IST   |   Update On 2025-04-28 01:14:00 IST
  • மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
  • அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலா இரண்டாவது சுற்றில் தோல்வி அடைந்தார்.

மாட்ரிட்:

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, ஜப்பானின் உஜிஜிமா உடன் மோதினார்.

இதில் ஜெசிகா பெகுலா 2-6, 3-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

மற்றொரு போட்டியில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி 6-2, 6-1 என்ற செட் கணக்கில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Tags:    

Similar News