டென்னிஸ்
துபாய் ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் ரூப்லெவ் தோல்வி
- துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.
- அரையிறுதிச் சுற்றில் ரஷியாவின் ஆன்ட்ரே ரூப்லெவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
துபாய்:
துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் ரஷியாவின் ஆன்ட்ரே ரூப்லெவ், நெதர்லாந்தின் டாலன் கிரீக்ஸ்பூர் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய கிரீக்ஸ்பூர் 7-5, 7-6 (8-6) என்ற செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தினார்.
இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் கிரீக்ஸ்பூர், மெத்வதேவ் உடன் மோதுகிறார்.