டென்னிஸ்
துபாய் ஓபன் டென்னிஸ்: ரூப்லெவ் காலிறுதிக்கு முன்னேற்றம்
- துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.
- 2வது சுற்றில் ரஷியாவின் ஆன்ட்ரே ரூப்லெவ் வெற்றி பெற்றார்.
துபாய்:
துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் ரஷியாவின் ஆன்ட்ரே ரூப்லெவ், பிரான்சின் யூகோ ஹம்பர்ட் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ரூப்லெவ் 6-4 என முதல் செட்டை வென்றார். இதற்கு பதிலடியாக யூகோ ஹம்பர்ட் 2வது செட்டை 7-6 (7-5) என போராடி வென்றார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை 6-3 என்ற கணக்கில் வென்ற ரூப்லெவ், காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.