டென்னிஸ்

துபாய் ஓபன் டென்னிஸ்: ரூப்லெவ் காலிறுதிக்கு முன்னேற்றம்

Published On 2026-02-26 01:36 IST   |   Update On 2026-02-26 01:36:00 IST
  • துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.
  • 2வது சுற்றில் ரஷியாவின் ஆன்ட்ரே ரூப்லெவ் வெற்றி பெற்றார்.

துபாய்:

துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் ரஷியாவின் ஆன்ட்ரே ரூப்லெவ், பிரான்சின் யூகோ ஹம்பர்ட் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ரூப்லெவ் 6-4 என முதல் செட்டை வென்றார். இதற்கு பதிலடியாக யூகோ ஹம்பர்ட் 2வது செட்டை 7-6 (7-5) என போராடி வென்றார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை 6-3 என்ற கணக்கில் வென்ற ரூப்லெவ், காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

Tags:    

Similar News