கிரிக்கெட் (Cricket)

பஹல்காம் தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தான் Vs இந்தியா லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் போட்டி ரத்து

Published On 2025-07-20 14:37 IST   |   Update On 2025-07-20 14:37:00 IST
  • இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் இன்று நடைபெறுவதாக இருந்தது.
  • இந்த போட்டியில் இருந்து ஷிகர் தவான், ஹர்பஜன் சிங் உள்ளிட்ட சில வீரர்கள் விலகினார்

ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் 20 ஒவர் லீக் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா , இங்கிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன.

யுவராஜ் சிங் தலைமையிலான இந்திய மூத்த வீரர்கள் அணியில் ஷிகர் தவான், ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா, இர்பான் பதான், யூசுப் பதான், ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு, பியூஸ் சாவ்லா, ஸ்டூவர்ட் பின்னி, வருண் ஆரோன், வினய் குமார், அபிமன்யு மிதுன், சித்தார்த் கவுல் குர்க்ரீத் மான் ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்த தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் இன்று நடைபெறுவதாக இருந்தது. இந்த போட்டியில் இருந்து ஷிகர் தவான், இர்பான் பதான், யூசுப் பதான், ஹர்பஜன் சிங் உள்ளிட்ட சில வீரர்கள் விலகினார்

பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானே காரணம் என்று குற்றஞ்சாட்டி அவர்கள் விளையாட மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் இந்த ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தப் போட்டிக்கு டிக்கெட் வாங்கியவர்களுக்கான கட்டணம் திருப்பி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News