கிரிக்கெட் (Cricket)

ரோகித் சர்மாவிடம் கற்றுக்கொண்டதை எப்போதும் நினைவில் வைத்திருப்பேன்: சுப்மன் கில்

Published On 2025-05-08 18:54 IST   |   Update On 2025-05-08 18:54:00 IST
  • ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
  • சுப்மன் கில் அல்லது பும்ரா கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்திய அணியின் டெஸ்ட் அணி கேப்டனாக இருந்த ரோகித் சர்மா, நேற்று டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவர் ஓய்வு பெற்றுள்ளதால், சுப்மன் கில் கேப்டனாக அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இல்லையென்றால் பும்ரா கேப்டனாக நியமிக்கப்படுவார்.

இந்த நிலையில் ரோகித் சர்மாவிடம் இருந்து கற்றுக் கொண்டதை எப்போதும் நினைவில் வைத்திருப்பேன் என சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சுப்மன் கில் கூறியதாவது:-

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு வீரராகவும், கேப்டனாகவும் நீங்கள் செய்த சாதனைகளுக்கு இந்தியா நன்றி தெரிவிக்கிறது. எனக்கும் மற்றும் எல்லோருக்கும் நீங்கள் உத்வேகமாக இருந்தீர்கள். உங்களுடன் விளையாடிய மற்றும் உங்களுக்கு எதிராக விளையாடிய அனைவருக்கும் உத்வேகமாக இருந்தீர்கள். நாங்கள் உங்களிடம் இருந்து கற்றுக்கொண்ட விசயங்களை எப்போதும் ஞாபத்தில் வைத்திருப்பேன்.

நான் விளையாடிய சிறந்த கேப்டன்களில் ஒருவரான ரோகித் சர்மாவுக்கு இனிய ஓய்வு வாழ்த்துக்கள். நன்றி கேப்டன்.

இவ்வாறு ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News