கிரிக்கெட் (Cricket)

சூர்யகுமார் யாதவ் மீது புகார் அளித்த பாகிஸ்தான்: அபராதம் விதித்த ஐசிசி

Published On 2025-09-26 21:16 IST   |   Update On 2025-09-26 21:16:00 IST
  • பஹல்காம் குறித்து பேசியதற்காக ஐசிசியிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார் அளித்திருந்தது.
  • அதன்பேரில் சூர்யகுமார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டி வெற்றிக்குப் பிறகு நடந்த பரிசளிப்பு விழாவில் பஹல்காம் குறித்து பேசியதற்காக இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் மீது ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது ஐசிசி அவருக்கு 30% அபராதம் விதித்துள்ளது.

லீக் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு, இந்த வெற்றியை ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்ற வீரர்களுக்கும், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் சமர்ப்பிப்பதாக சூர்யகுமார் யாதவ் கூறியிருந்தார்.

இது குறித்து ஐசிசியிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார் அளித்திருந்தது. அதன்பேரில் சூர்யகுமார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News