இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் தொடர்: பும்ரா உள்பட 3 முக்கிய வீரர்களுக்கு ஓய்வு
- பார்டர் கவாஸ்கர் தொடர் ஜனவரி 7-ந் தேதியுடன் முடிகிறது.
- இந்தியா அணி சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடர் ஜனவரி 7-ந் தேதியுடன் நிறைவடைகிறது.
இதனையடுத்து இந்தியா அணி சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.
முதலில் டி20 தொடரும் அதன் பிறகு ஒருநாள் தொடரும் நடைபெற உள்ளது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி 22-ந் தேதி தொடங்கி பிப்ரவரி 2-ந் தேதியுடன் முடிகிறது.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் பிப்ரவரி 6-ல் தொடங்கி பிப்ரவரி 12-ல் முடிகிறது. இந்த ஒருநாள் தொடர் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு ஒரு பயிற்சி ஆட்டமாக கருதப்படுகிறது.
இந்நிலையில் இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் பும்ரா, விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியா 3 வீரர்களுக்கு ஓய்வு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிப்ரவரி மாதம் இறுதியில் சாம்பியன்ஸ் டிராபி தொடங்க உள்ள நிலையில் இவர்கள் 3 பேருக்கும் ஓய்வு அளிப்பது அதிர்ச்சியாக உள்ளது. பும்ரா பார்டர் கவாஸ்கர் தொடரில் அதிக ஓவர்களை வீசியுள்ளார். அதற்காக அவருக்கு ஓய்வு அறிவிக்கலாம். ஃபார்மில் இல்லாத ரோகித், விராட் கோலிக்கு ஏன் ஓய்வு அளிக்க வேண்டும் என்ற கருத்து வெளியாகி உள்ளது.