கிரிக்கெட் (Cricket)

கோலி, ரோகித் விளையாடும் கடைசி ஆட்டத்தை தவறவிடாதீர்கள்- ப்ராட் ஹாடின்

Published On 2025-10-11 17:44 IST   |   Update On 2025-10-11 17:44:00 IST
  • ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கோலியும், ரோகித்தும் விளையாடப் போவதை பாருங்கள்.
  • அதுதான் அவர்களின் கடைசி ஆட்டம் என நினைக்கிறேன்.

புதுடெல்லி:

இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி. இருவரும் 20 ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டனர். ஒருநாள் ஆட்டத்தில் மட்டுமே விளையாட உள்ளனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வருகிற 19- ந் தேதி தொடங்கும் 3 போட்டிக்கொண்ட ஒரு நாள் தொடரில் ரோகித் சர்மாவும், விராட் கோலியியும் தேர்வு பெற்றுள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் சர்வதேச போட்டியில் ஆட இருக்கிறார்கள். இந்த தொடரோடு இருவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருவதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் கோலியும், ரோகித்தும் விளையாடும் கடைசி ஆட்டத்தை தவறவிடாதீர்கள் என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹாடின் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கோலியும், ரோகித்தும் விளையாடப் போவதை பாருங்கள். அதுதான் அவர்களின் கடைசி ஆட்டம் என நினைக்கிறேன். அதனால் அந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள். தற்போது கில் கேப்டனாக உள்ளதால், ரோகித் சர்மா எந்த அழுத்தமும் இன்றி அடித்து ஆடுவார்.

என பிராட் ஹாடின் கூறினார்.

Tags:    

Similar News