கிரிக்கெட் (Cricket)

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை நடத்த பிசிசிஐ பரிசீலனை எனத் தகவல்

Published On 2025-05-10 15:46 IST   |   Update On 2025-05-10 15:46:00 IST
  • முதல் இரண்டு இறுதிப் போட்டியில் இந்தியா விளையாடியது.
  • முதல் இரண்டு போட்டிகளும் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற நிலையில், 3ஆவது போட்டியும் அங்குதான் நடைபெற இருக்கிறது.

டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் சர்வதேச நாடுகளுக்கும் 2025-2027 வரை இரண்டு வருடங்கள் விளையாடும் தொடர்களின் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

இந்த ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. முதல் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி 2021-ல் இங்கிலாந்து லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதின. நியூசிலாந்து வெற்றி பெற்றது.

2ஆவது இறுதிப் போட்டியும் (2023) இங்கிலாந்து லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா- ஆஸ்திரேலியா மோதின. ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது.

3ஆவது இறுதிப் போட்டி (2025) வருகிற ஜூன் மாதம் அதே லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதில் ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

அடுத்த இறுதிப் போட்டி 2027-ல் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியை இந்தியாவில் நடத்த பிசிசிஐ பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜிம்பாப்வேயில் நடைபெற்ற ஐசிசி தலைமை நிர்வாகிகள் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இறுதிப் போட்டியை நடத்துவது தொடர்பான திட்டம் பின்னர் இறுதி செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் பங்கேற்க வாய்ப்பில்லை. ஒருவேளை பாகிஸ்தான் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிப் பெற்றால் போட்டியை இந்தியாவில் நடத்துவதில் சிரமம் ஏற்படும்.

Tags:    

Similar News