புதுச்சேரி
போகி பண்டிகையை ஒட்டி புதுச்சேரியில் நாளை விடுமுறை அறிவிப்பு
- நாளை போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது
- புதுச்சேரி, காரைக்கால், ஏனாம், பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14 முதல் 18ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 15, 16, 17 ஆகிய நாட்கள் அரசு விடுமுறையாக இருக்கும் நிலையில், கூடுதலாக போகிப் பண்டிகையான 14ம் தேதியும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 5 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், போகியை முன்னிட்டு புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி, காரைக்கால், ஏனாம், பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை என அரசு அறிவித்துள்ளது. விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஜனவரி 31 ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாட்களாக செயல்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது