இந்தியா
உத்தரகாண்ட்: எய்ம்ஸ் மருத்துவமனை ஹெலிகாப்டர் விபத்து
- விமானி சாதுர்யமாக செயல்பட்டதால் நூலிழையில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது .
- ஹலிகாப்டருக்குள் பயணித்த 5 பேர் காயமின்றி உயிர் தப்பியதாக தகவல்
உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடுவானில் பறந்து கொண்டிருந்த எய்ம்ஸ் மருத்துவமனை ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
விமானி சாதுர்யமாக செயல்பட்டதால் நூலிழையில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது . ஹலிகாப்டருக்குள் இருந்த நோயாளிகள் 3 பேர், டாக்டர், விமானி என மொத்தம் 5 பேர் காயமின்றி உயிர் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மலைப்பிரதேசங்களில் நோயாளிகளை மீட்பதற்காக சஞ்சீவினி என்ற ஹெலிகாப்டர் சேவையை எய்ம்ஸ் மருத்துவமனை வழங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது.