இந்தியா

60 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்யாததை பிரதமர் மோடி அரசு 10 ஆண்டில் செய்துள்ளது: மத்திய மந்திரி

Published On 2024-01-23 09:21 GMT   |   Update On 2024-01-23 09:21 GMT
  • மக்களின் நீண்ட நாளைய காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது.
  • 140 கோடி மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார்.

சிம்லா:

மத்திய மந்திரி அனுராக் தாக்குர் இமாசல் பிரதேசத்தின் ஹமீர்புரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

60 ஆண்டுகளாக காங்கிரஸ் செய்ய முடியாத பணியை பிரதமர் நரேந்திர மோடி அரசு 10 ஆண்டுகளில் செய்துள்ளது.

செய்த பணிகளை மக்களிடம் கொண்டு செல்வது கட்சி தொண்டர்களின் தலையாய பொறுப்பு.

நீண்ட நாளைய காத்திருப்பு முடிவுக்கு வந்தது. 140 கோடி மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.

தேசத்தில் பிறந்தது முதல் இன்று வரை சித்தாந்தத்தைக் கடைப்பிடித்து வரும் ஒரே அரசியல் கட்சி பா.ஜ.க. மட்டுமே என்பது நிரூபணமானது என தெரிவித்தார்.

Tags:    

Similar News