காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய மூத்த மகள்.. தாய்,தந்தை, சகோதரி மூவரும் தற்கொலை செய்த சோகம்
- ஹெப்பல் நீர்த்தேக்கத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
- உடலையும், நான்கு பக்க தற்கொலைக் குறிப்பையும் போலீசார் மீட்டனர்.
கர்நாடக மாநிலம் மைசூரில் காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிய பெண்ணின் தாய், தந்தை மற்றும் சகோதரி தற்கொலை செய்து கொண்டனர்.
இறந்தவர்கள் மகாதேவ சுவாமி (55), மஞ்சுளா (45) மற்றும் ஹர்ஷிதா (20) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அந்தக் குடும்பம் புதனூர் கிராமத்தில் வசித்து வந்தது. ரியல் எஸ்டேட் முகவரான சுவாமிக்கு இருந்து வந்தார்.
சுவாமியின் மூத்த மகள் காதலை குடும்பத்தினர் ஏற்கவில்லை. பின்னர் அந்த பெண் தனது காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதையடுத்து பெண்ணின், தாய், தந்தை, சகோதரி மூவரும் ஹெப்பல் நீர்த்தேக்கத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். அவர்களது உடலையும், நான்கு பக்க தற்கொலைக் குறிப்பையும் கடந்த சனிக்கிழமை போலீசார் மீட்டனர்.
அந்தக் கடிதத்தில், மூத்த மகள், மரணத்திற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும், அவர்களின் இறுதிச் சடங்குகளில் அவள் பங்கேற்கக் கூடாது என்றும், சொத்துக்களை அவளுடைய சகோதரனுக்குக் கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.