இந்தியா

தெலுங்கானாவில் 70.60 சதவீத வாக்குகள் பதிவு

Published On 2023-12-01 02:22 GMT   |   Update On 2023-12-01 02:52 GMT
  • காலை 9 மணி நிலவரப்படி 8.52 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. 11 மணி நிலவரப்படி 20.64 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
  • 3 மணி நிலவரப்படி தெலுங்கானாவில் 51.89 சதவீத வாக்குகள் பதிவாகின. 5 மணி நிலவரப்படி தெலுங்கானாவில் 63.94 வாக்குகள் பதிவாகின.

119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானாவில் நேற்று ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. 106 தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், நக்சலைட்டுகள் பாதிப்பு அதிகமுள்ள 13 தொகுதிகளில் காலை 7 மணி முதல் மலை 4 மணி வரையிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

106 தொகுதிளில் 5 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். அதேபோல் 13 தொகுதிகளில் 4 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

அனைத்து வாக்காளர்களும் வாக்களித்த நிலையில், 70.60 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை பிடிக்க பிஆர்எஸ் கட்சியினர் முழு வீச்சில் செயல்பட்டனர். காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க ஏழு முக்கிய வாக்குறுதிகளை அளித்தது பிரசாரம் மேற்கொண்டது. பா.ஜனதா கடும் சவால் கொடுக்க பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை பிரசாரத்தில் களம் இறக்கியது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் அதிக இடங்களை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எதுவாக இருந்தாலும் வருகிற 3-ந்தேதி (நாளைமறுதினம்) வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அன்றைய தினம் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்பது தெரிந்துவிடும்.

காலை 9 மணி நிலவரப்படி 8.52 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. 11 மணி நிலவரப்படி 20.64 சதவீதம் வாக்குகள் பதிவாகின. 3 மணி நிலவரப்படி தெலுங்கானாவில் 51.89 சதவீத வாக்குகள் பதிவாகின. 5 மணி நிலவரப்படி தெலுங்கானாவில் 63.94 வாக்குகள் பதிவாகின.

Tags:    

Similar News