இந்தியா

திருப்பதி மலையில் பூங்காவை நாசம் செய்த காட்டு யானைகள்

Published On 2024-04-22 11:46 IST   |   Update On 2024-04-22 11:46:00 IST
  • வனப்பகுதியில் இருந்து 14 காட்டு யானைகள் குளத்தில் தண்ணீர் குடிக்க வந்தன.
  • இரும்பு தடுப்பு வேலிகளை உடைத்து தள்ளி பூங்காவிற்குள் நுழைந்தன.

திருப்பதி:

திருப்பதி மலையில் உள்ள ஸ்ரீ வாரி பாடலா வனப்பகுதியில் சீலா தோரணம் பூங்கா உள்ளது. இதன் அருகில் வன விலங்குகள் தண்ணீர் குடிப்பதற்காக குளம் ஒன்று உள்ளது.

வனப்பகுதியில் இருந்து 14 காட்டு யானைகள் குளத்தில் தண்ணீர் குடிக்க வந்தன. அப்போது அருகில் இருந்த சீலா தோரணத்திற்கு வந்து அங்கு அமைக்கப்பட்டு இருந்த இரும்பு தடுப்பு வேலிகளை உடைத்து தள்ளி பூங்காவிற்குள் நுழைந்தன.

அங்கிருந்த மரங்கள் மற்றும் பூ தொட்டிகள், பூச்செடிகள் ஆகியவற்றை மிதித்து நாசம் செய்தன. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் தொடர்ந்து சைரன் ஒலி எழுப்பி காட்டு யானைகளை விரட்டியடித்தனர்.

Tags:    

Similar News