இந்தியா
விபத்து நடந்த இடத்துக்கு மம்தா பானர்ஜி செல்கிறார்
- கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒடிசாவின் பாலசோரில் கோர விபத்தில் சிக்கியது.
- விபத்து நடந்த பகுதிக்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அரசு சார்பில் குழுவை அனுப்பியுள்ளார்.
மேற்கு வங்காளத்தின் ஷாலிமாரில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒடிசாவின் பாலசோரில் கோர விபத்தில் சிக்கியது. அங்கு மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விபத்து நடந்த பகுதிக்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அரசு சார்பில் குழுவை அனுப்பியுள்ளார்.
இந்த நிலையில் ஒடிசாவில் ரெயில் விபத்து நடந்த பாலசோர் பகுதிக்கு இன்று பிற்பகலில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி சென்று நிலைமையை ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் விபத்தில் காயம் அடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.