இந்தியா

பட்டப்பகலில் துணிகரம்: வங்கிக்குள் புகுந்து ரூ.12 லட்சம் கொள்ளை

Published On 2024-04-07 02:57 GMT   |   Update On 2024-04-07 02:57 GMT
  • அமிர்தசரஸ் நகரில் தனியார் வங்கி ஒன்று உள்ளது.
  • மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் துப்பாக்கியுடன் வங்கிக்குள் நுழைந்தனர்.

அமிர்தசரஸ்:

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் தனியார் வங்கி ஒன்று உள்ளது. நேற்று காலை இந்த வங்கி வழக்கம் போல் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் துப்பாக்கியுடன் வங்கிக்குள் நுழைந்தனர். அவர்கள் துப்பாக்கியை காட்டி வங்கி ஊழியர்களை மிரட்டி ரூ.12 லட்சத்தை கொள்ளையடித்து அங்கிருந்து தப்பி சென்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News