இந்தியா

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு: ஜெயந்த் சவுத்ரி கட்சியில் இருந்து விலகிய உ.பி. தலைவர்

Published On 2025-04-05 05:13 IST   |   Update On 2025-04-05 05:13:00 IST
  • வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு ராஷ்ட்ரிய லோக் தளம் ஆதரவு அளித்தது.
  • இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் தலைவரான ரிஸ்வி கட்சியில் இருந்து விலகினார்.

லக்னோ:

பாராளுமன்றத்தின் மக்களவையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. நீண்ட விவாதத்திற்கு பிறகு, இம்மசோதா கடந்த புதன்கிழமை நள்ளிரவில் நிறைவேறியது.

இதையடுத்து, நேற்று முன்தினம் மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சிகள் ஆதரவு அளித்தன.

இந்நிலையில், மசோதாவிற்கு ஆதரவு அளிக்கும் ஜெயந்த் சவுத்ரிக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் உ.பி. மாநில பொதுச்செயலாளரான ரிஸ்வி கட்சி மற்றும் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும் ஆயிரக்கணக்கானோர் கட்சியில் இருந்து விலக உள்ளனர் என அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News