இந்தியா

செங்கோட்டையில் நடந்தது தற்கொலைப் படை தாக்குதல் தான்! - உறுதி செய்த என்ஐஏ

Published On 2025-11-17 09:58 IST   |   Update On 2025-11-17 09:58:00 IST
  • காஷ்மீர் இளைஞர் அமீர் ரஷீத் அலியை தேசிய புலனாய்வு அமைப்பு செய்து விசாரணை
  • காஷ்மீரில் இருந்து வந்த அமீர், டெல்லியில் தங்கி காரை வாங்கி, உமருக்குக் கொடுத்தார்

டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர் . இது தொடர்பான வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) விசாரித்து வருகிறது.

இந்நிலையில், டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிகுண்டு வெடிப்பு சம்பவம் தற்கொலைப் படை தாக்குதல் என்று தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

டெல்லி குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளி மருத்துவர் உமர் உன்-நபிக்கு உதவிய காஷ்மீர் இளைஞர் அமீர் ரஷீத் அலியை தேசிய புலனாய்வு அமைப்பு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

காஷ்மீரில் இருந்து வந்த அமீர், டெல்லியில் தங்கி காரை வாங்கி, உமருக்குக் கொடுத்தார் என்று என்ஐஏ தெரிவித்தது.

Tags:    

Similar News