இந்தியா

எங்கெல்லாம் அவர் செல்கிறாரோ அங்கெல்லாம் கூட்டணி முறிகிறது: ராகுல் காந்தியை சாடிய ராஜ்நாத் சிங்

Published On 2024-02-20 11:23 GMT   |   Update On 2024-02-20 11:23 GMT
  • ராகுல் காந்தியின் நடைபயணம் உத்தர பிரதேச மாநிலத்திற்குள் நுழைந்துள்ளது.
  • உத்தர பிரதேசத்தில் காங்கிரசுக்கு 11 இடங்களை அகிலேஷ் யாதவ் ஒதுக்கியுள்ளார்.

லக்னோ:

2024 மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடிக்க இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டது. தேர்தல் நெருங்க நெருங்க இந்தக் கூட்டணி தாக்குப் பிடிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள 80 இடங்களில் 11 இடங்களை காங்கிரசுக்கு அகிலேஷ் யாதவ் ஒதுக்கியுள்ளார்.

இதற்கிடையே, காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி தற்போது நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அவரது நடைபயணம் உத்தர பிரதேச மாநிலத்திற்குள் நுழைந்துள்ளது.

இந்நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ராகுல் காந்தி எங்கெல்லாம் செல்கிறாரோ அங்கெல்லாம் கூட்டணி முறியும். அவர் எங்கெல்லாம் செல்கிறாரோ அங்கு தொண்டர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைகிறது என தெரிவித்தார்.

Tags:    

Similar News