இந்தியா

ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்துக்காக நடக்கும் போராட்டம் இந்த தேர்தல்: ராகுல் காந்தி

Published On 2024-04-03 11:43 GMT   |   Update On 2024-04-03 11:43 GMT
  • வேட்புமனு தாக்கல் முடிந்ததும் ராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
  • அப்போது, வயநாடு மக்களின் ஆதரவிற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

திருவனந்தபுரம்:

வயநாடு பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார். வயநாடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலரிடம் தனது வேட்புமனுவை ராகுல்காந்தி தாக்கல் செய்தார். அப்போது காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட தலைவர்கள் பலர் உடனிருந்தனர்.

இந்நிலையில், வேட்புமனு தாக்கல் முடிந்ததும் ராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பாராளுமன்ற தேர்தல் ஜனநாயகத்துக்காகவும், இந்திய அரசியல் சாசனத்துக்காகவும் நடக்கும் போராட்டம்.

இந்த நாட்டின் ஜனநாயகத்தையும், இந்த நாட்டின் அரசியல் சாசனத்தையும் அழிக்க நினைக்கும் சக்திகள் ஒரு பக்கம்.

இன்னொரு பக்கம் காக்கும் சக்தி. யார் எந்தப் பக்கம் இருக்கிறார்கள் என்பது உங்கள் அனைவருக்கும் தெளிவாகத் தெரியும்.

அரசியலமைப்பை யார் தாக்குகிறார்கள், யார் இந்த நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பைத் தாக்குகிறார்கள் என்பது தெளிவாகத் தெரியும்.

வயநாடு தனது வீடு என்றும், மக்களே தனது குடும்பம், அதன் அழகிய வரலாறு மற்றும் பாரம்பரியங்கள் தனது வழிபாட்டு ஒளி என்று கூறிய அவர், வயநாடு மக்களின் அசைக்க முடியாத ஆதரவிற்காக நான் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நியாயத்தின் புதிய சகாப்தத்தில் நாம் அடியெடுத்து வைக்கும்போது, உங்கள் ஒவ்வொருவருக்கும் சேவை செய்வதில் நான் கடமைப்பட்டிருக்கிறேன் என தெரிவித்தார்.

Tags:    

Similar News