இந்தியா

2047-க்குள் விக்சித் பாரத் ஆக முக்கிய கவனம்: நிர்மலா சீதாராமன்

Published On 2025-04-21 17:16 IST   |   Update On 2025-04-21 17:16:00 IST
  • கொரோனா தொற்று காலத்தின்போது நமது நிதி பற்றாக்குறை அதிகரித்தது.
  • இந்த நிதி பற்றாக்குறையை எப்படி நிர்வகிக்கப் போகிறோம் என்பது குறித்து 2021-ல் தெளிவான பார்வையுடன் வந்தோம்

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்கா சென்றுள்ளார். சான்பிரான்சிஸ்கோவில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவர்களிடம் உரையாடினார். அப்போது மோடி அரசு 2047-க்குள் விக்சித் பாரத் என வளர்ச்சி இந்தியாவுக்கான மாற்றத்திற்கு முக்கியத்தும் கொடுத்து வருகிறது என்றார்.

இது தொடர்பாக நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-

கொரோனா காலத்தின் போதும் இந்தியா நிதி ரீதியாக விவேகமான கொள்கைகளைப் பின்பற்றியது. சவாலான சூழ்நிலைகள் இருந்தபோதிலும் தேவையற்ற நிதிச் செலவை கட்டுப்படுத்தியது.

கொரோனா தொற்று காலத்தின்போது நமது நிதி பற்றாக்குறை அதிகரித்தது. ஆனால், இந்த நிதி பற்றாக்குறையை எப்படி நிர்வகிக்கப் போகிறோம் என்பது குறித்து 2021-ல் தெளிவான பார்வையுடன் வந்தோம். வருடத்திற்கு வருடம் என்ற இலக்கை நிர்ணயித்தோம். அதன்படி 2026-க்குள் நிதி பற்றாக்குறையை 4.5 சதவீத்திற்கு கீழ் கொண்டு வர உறுதிப்பூண்டோம். நாம் நிர்ணயித்ததுபோன்று தோல்வியின்றி வருடத்திற்கு வருடம் பின்தொடர்ந்து வருகிறோம்.

இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தனது எக்ஸ் பக்கத்தில் "2047-க்குள் வளர்ச்சி இந்தியா (விக்சித் பாரத்) என்பதுதான் நம்முடைய அரசின் முக்கிய கவனம். பெண்கள், ஏழைகள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் ஆகிய நான்கு முக்கிய சாதிகளை கவனித்துக் கொள்வதன் மூலம் இதை அடைய முடியும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

நமது திறன்களை வளர்ப்பதற்கு முக்கியமான Sunrise Sectors மற்றும் இந்தியா உலகளாவிய தலைவராக உருவெடுத்துள்ள டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (DPI) போன்ற துறைகளிலும் இந்தியாவின் கவனம் உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News