என் மலர்
நீங்கள் தேடியது "Viksit Bharat 2047"
- கொரோனா தொற்று காலத்தின்போது நமது நிதி பற்றாக்குறை அதிகரித்தது.
- இந்த நிதி பற்றாக்குறையை எப்படி நிர்வகிக்கப் போகிறோம் என்பது குறித்து 2021-ல் தெளிவான பார்வையுடன் வந்தோம்
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்கா சென்றுள்ளார். சான்பிரான்சிஸ்கோவில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவர்களிடம் உரையாடினார். அப்போது மோடி அரசு 2047-க்குள் விக்சித் பாரத் என வளர்ச்சி இந்தியாவுக்கான மாற்றத்திற்கு முக்கியத்தும் கொடுத்து வருகிறது என்றார்.
இது தொடர்பாக நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-
கொரோனா காலத்தின் போதும் இந்தியா நிதி ரீதியாக விவேகமான கொள்கைகளைப் பின்பற்றியது. சவாலான சூழ்நிலைகள் இருந்தபோதிலும் தேவையற்ற நிதிச் செலவை கட்டுப்படுத்தியது.
கொரோனா தொற்று காலத்தின்போது நமது நிதி பற்றாக்குறை அதிகரித்தது. ஆனால், இந்த நிதி பற்றாக்குறையை எப்படி நிர்வகிக்கப் போகிறோம் என்பது குறித்து 2021-ல் தெளிவான பார்வையுடன் வந்தோம். வருடத்திற்கு வருடம் என்ற இலக்கை நிர்ணயித்தோம். அதன்படி 2026-க்குள் நிதி பற்றாக்குறையை 4.5 சதவீத்திற்கு கீழ் கொண்டு வர உறுதிப்பூண்டோம். நாம் நிர்ணயித்ததுபோன்று தோல்வியின்றி வருடத்திற்கு வருடம் பின்தொடர்ந்து வருகிறோம்.
இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தனது எக்ஸ் பக்கத்தில் "2047-க்குள் வளர்ச்சி இந்தியா (விக்சித் பாரத்) என்பதுதான் நம்முடைய அரசின் முக்கிய கவனம். பெண்கள், ஏழைகள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் ஆகிய நான்கு முக்கிய சாதிகளை கவனித்துக் கொள்வதன் மூலம் இதை அடைய முடியும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
நமது திறன்களை வளர்ப்பதற்கு முக்கியமான Sunrise Sectors மற்றும் இந்தியா உலகளாவிய தலைவராக உருவெடுத்துள்ள டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (DPI) போன்ற துறைகளிலும் இந்தியாவின் கவனம் உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
- லட்சியத்தை எட்ட மாநிலங்கள் மாநிலங்கள் செயல்பட முடியும்.
- சர்வதேச முதலீடுகளுக்கு உகந்ததாக நமது கொள்கைகளை உருவாக்க வேண்டும்.
மோடி 3-வது முறையாக பிரதமாக பதவி ஏற்ற நிலையில் முதல் நிதி ஆயோக் கூட்டம் இன்று டெல்லியில் நடந்து வருகிறது. இதில் அனைத்து மாநில முதல்வர்களும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள் இந்த கூட்டத்தை புறக்கணித்தனர். மம்தா பானர்ஜி மட்டும் கலந்து கொண்டார். ஆனால், மைக் ஆஃப் செய்யப்பட்டதாக குற்றம்சாட்டி வெளிநடப்பு செய்தார்.
இதற்கிடையே பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் "2047-வளர்ச்சி இந்தியா (Viksit Bharat@2047) என்பது ஒவ்வொரு இந்தியனின் லட்சியம். இந்த லட்சியத்தை எட்ட மாநிலங்கள் செயல்பட முடியும். இந்தியா இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி, சர்வதேச முதலீடுகளுக்கு உகந்ததாக நமது கொள்கைகளை உருவாக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவரும், பீகார் மாநில முதல்வருமான நிதிஷ் குமாரும் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.






