இந்தியா
டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் குறித்த விவரங்களை கேட்டறிந்தார் பிரதமர் மோடி
- 24 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- NIA அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்
டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் அருகே காரில் மாலை 6.50 மணியளவில் வெடிப்பு நடந்துள்ளது.
அங்கிருந்த சில வாகனங்கள் இந்த வெடிப்பால் தீப்பிடித்துள்ளன. இந்த குண்டுவெடிப்பில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 24 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காவல் உயரதிகாரிகள், NIA அதிகாரிகளும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லி செங்கோட்டை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தொடர்பு கொண்டு நிலைமை குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார்
கார் வெடிப்பு தொடர்பாக விசாரணை நடக்கிறது. NIA உள்ளிட்ட ஏஜென்சிகள் ஆய்வு செய்கின்றன என்று டெல்லி காவல் ஆணையர் சதீஷ் கோல்சா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.