இந்தியா

விமான நிலையங்களுக்கு பயணிகள் 3 மணி நேரத்துக்கு முன்னதாக வர உத்தரவு

Published On 2025-05-09 14:39 IST   |   Update On 2025-05-09 14:51:00 IST
  • விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.
  • பயணிகளுக்கான உடல் மற்றும் அடையாள சோதனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

திருவனந்தபுரம்:

இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் நடந்துவரும் நிலையில் இரு நாட்டினரும் ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதையடுத்து விமான நிலையங்களுக்கு பயணிகள் 3 மணி நேரத்திற்கு முன்னதாக வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள விமான நிலையங்களுக்கு வரக்கூடிய பயணிகள் மூன்று அடுக்கு பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். பயணிகளுக்கான உடல் மற்றும் அடையாள சோதனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இதனால் விமான நிலையங்களுக்கு பயணிகள் 3 மணி நேரத்திற்கு முன்னதாக வருமாறு ஏர் இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.

Tags:    

Similar News