இந்தியா

காவிரியின் உபரிநீரை தேக்கவே மேகதாதுவில் அணை- கர்நாடக மந்திரி கருத்து

Published On 2023-07-06 10:14 GMT   |   Update On 2023-07-06 10:14 GMT
  • யாருடைய ஒதுக்கீட்டு நீரை தடுக்கவோ, மறுக்கவோ அணை கட்ட திட்டமிடவில்லை.
  • மேகதாது அணை திட்டம் குறித்து தமிழக அரசு புரிந்துகொள்ள வேண்டும்.

பெங்களூர்:

கர்நாடக காங்கிரஸ் மந்திரி பிரியங்க் கார்கே கூறியதாவது:-

காவிரியின் உபரி நீரை தேக்கி வைத்து பயன்படுத்தவே மேகதாதுவில் அணைகட்ட திட்டமிட்டுள்ளோம். யாருடைய ஒதுக்கீட்டு நீரை தடுக்கவோ, மறுக்கவோ அணை கட்ட திட்டமிடவில்லை. மேகதாது அணை திட்டம் குறித்து தமிழக அரசு புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பிரியங்க் கார்கேவின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய மந்திரியை தமிழக அமைச்சர் துரைமுருகன் சந்தித்த நிலையில் கர்நாடக மந்திரி இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News