இந்தியா

மம்தா பானர்ஜி

ஐசிசி தேர்தலில் கங்குலி போட்டியிட அனுமதி அளிக்க வேண்டும் - பிரதமருக்கு மம்தா பானர்ஜி கோரிக்கை

Published On 2022-10-17 21:05 GMT   |   Update On 2022-10-17 21:05 GMT
  • ஐ.சி.சி. தலைவர் பதவிக்கு வரும் 20-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யப்பட வேண்டும்.
  • கங்குலியை ஐசிசி தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

கொல்கத்தா:

கொல்கத்தா விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மம்தா பானர்ஜி கூறியதாவது:

கங்குலி மிக பிரபலமான நபர். இந்திய அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார். சவுரவ் கங்குலி மேற்கு வங்காளத்தின் பெருமை மட்டும் கிடையாது. அவர் இந்தியாவின் பெருமையும் கூட. அவர் ஏன் இவ்வளவு நியாயமற்ற முறையில் ஒதுக்கப்பட்டார்.

கங்குலி மீது கவனம் செலுத்தி அவரை ஐ.சி.சி. தேர்தலில் போட்டியிட அனுமதி அளிக்க வேண்டும் என்று நான் பிரதமர் மோடியிடம் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

ஐ.சி.சி. தலைவர் பதவிக்கு வரும் 20-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யப்பட வேண்டும். ஐ.சி.சி. தலைவர் பதவிக்கு கங்குலி போட்டியிட்டால் பி.சி.சி.ஐ. ஆதரவுடன் கங்குலி எளிதில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

Tags:    

Similar News