இந்தியா

அமித் ஷா மன்னிப்பு கேட்கக்கோரி எதிர்க்கட்சிகள் கடும் அமளி: இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

Published On 2024-12-18 14:34 IST   |   Update On 2024-12-18 14:42:00 IST
  • அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர் என முழக்கமிடுவது இப்போது FASHION ஆகிவிட்டது என அமித் ஷா பேச்சு.
  • அமித் ஷா பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டுள்ளனர்.

அரசியலமைப்பு மீதான விவாதம் நேற்று மாநிலங்களவையில் நடைபெற்றது. அப்போது மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா பேசும்போது 'அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்' என முழக்கமிடுவது இப்போது FASHION ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால் சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும் என்று பேசினார்.

அமித் ஷாவின் இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இன்று காலை 11 மணிக்கு மக்களவை கூடியதும் இது தொடர்பாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை மதியம் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் 2 மணிக்கு அவை மீண்டும் கூடியது. அப்போதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள். அமித் ஷா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

அதேபோல் மாநிலங்களவையும் இன்று காலை 11 மணிக்கு தொடங்கிய நிலையில் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 2 மணிக்கு மீண்டும் அவை தொடங்கியதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட அவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

Tags:    

Similar News