குமாரசாமி முதல்-மந்திரி ஆவது உறுதி: தேவகவுடா பேச்சு
- தேவகவுடா தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
- இளைஞர்கள் எங்கள் கட்சியை ஆதரிக்க வேண்டும்.
பெங்களூரு :
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அவர் நேற்று ராமநகரில் ஜனதா தளம்(எஸ்) கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார். அங்கு நடைபெற்ற கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசியதாவது:-
இந்த நாட்டில் விவசாயிக்கு ஓய்வூதியம் கொடுக்கிறேன் என்று சொல்லும் ஒருவர் இருக்கிறார் என்றால் அது குமாரசாமி தான். மக்களுக்கு கொடுக்கும் வாக்குறுதிகளை தவறாமல் நிறைவேற்றும் ஒரே தலைவர் குமாரசாமி தான். காங்கிரசின் கேலி-கிண்டல்களுக்கு மத்தியில் விவசாய கடன்களை குமாரசாமி தள்ளுபடி செய்தார். அதாவது ரூ.26 ஆயிரம் கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்தார். இந்த தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) கட்சி வெற்றி பெற்று குமாரசாமி முதல்-மந்திரி ஆவது உறுதி. இளைஞர்கள் எங்கள் கட்சியை ஆதரிக்க வேண்டும்.
இவ்வாறு தேவேகவுடா பேசினார்.