இந்தியா

கர்நாடகா கார் விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி- வைரலாகும் அதிர்ச்சி காட்சி

Published On 2025-04-02 13:23 IST   |   Update On 2025-04-02 15:02:00 IST
  • இறந்தவர்களில் 2 பேர் குழந்தைகள்.
  • விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்நாடக மாநிலத்தின் சல்லகேர் மற்றும் பல்லாரி இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் இன்று கார் விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியாகி உள்ளனர். 2 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இறந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மௌலா, சமீர் மற்றும் ரெஹ்மான் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இறந்தவர்களில் 2 பேர் குழந்தைகள். அனைவரும் கர்நாடகாவின் யாத்கீர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

இந்த விபத்து தொடர்பான வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. அதில் அதிவேகமாக வந்த கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து 15 முறை பல்டி அடித்தது. பல்டி அடிக்கும் போதே காரில் இருந்த ஒருவர் கிழே விழுந்த அதிர்ச்சி காட்சியும் அதில் தெரிகிறது. இந்த விபத்தில் கார் முற்றிலும் சேதமடைந்தது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News