இந்தியா

இந்தியாவுடன் இமாச்சல் வழியே மீண்டும் வர்த்தகம் - சீனா கொள்கை அளவில் ஒப்புதல்

Published On 2025-08-25 10:21 IST   |   Update On 2025-08-25 10:21:00 IST
  • கொரோனா காரணமாக இந்தியா-சீனா இடையேயான எல்லை தாண்டிய வர்த்தகம் நிறுத்தப்பட்டிருந்தது.
  • இமாச்சல பிரதேசத்தின் ஷிப்கி லா கணவாய் வழியாக வர்த்தகம் தொடங்க சீனா ஒப்புதல்

இந்தியா - சீனா இடையே மீண்டும் விமான போக்குவரத்து சேவை மற்றும் எல்லை வர்த்தகத்தை தொடங்க இரு நாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளது

கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டிருந்த இந்தியா-சீனா இடையேயான எல்லை தாண்டிய வர்த்தகம், இமாச்சல பிரதேசத்தின் ஷிப்கி லா கணவாய் வழியாக மீண்டும் தொடங்க சீனா கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது.

வர்த்தகத்தோடு, கைலாஷ் மான்சரோவர் யாத்திரையையும் மீண்டும் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கும் சீனா சாதகமாக பதிலளித்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. 

Tags:    

Similar News