இந்தியா

வயது ஒரு தடையல்ல, நான் இப்போதும் உத்வேகத்துடன் இருக்கிறேன் - சரத் பவார்

Published On 2023-07-06 13:34 GMT   |   Update On 2023-07-06 13:37 GMT
  • தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
  • அப்போது பேசிய சரத் பவார், வயது ஒரு தடையல்ல, நான் இப்போதும் உத்வேகத்துடன் இருக்கிறேன் என்றார்.

புதுடெல்லி:

மகாராஷ்டிர சட்டசபையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியிடம் 53 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

அஜித் பவார் மற்றும் சரத் பவார் தலைமையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டங்கள் நேற்று தனித்தனியாக நடைபெற்றன.

இதையடுத்து, அஜித் பவார் தரப்பு இந்திய தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ள மனுவில் தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் சின்னத்திற்கான உரிமையை தங்களிடம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் சரத் பவார் தலைமையில் இன்று நடைபெற்றது.

அப்போது பேசிய அவர், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் நான் தான். 82 ஆக இருந்தாலும் சரி, 92 ஆக இருந்தாலும் சரி, வயது ஒரு தடையல்ல. நான் இப்போதும் உத்வேகத்துடன் இருக்கிறேன். இன்றைய சந்திப்பு எங்களின் மன உறுதியை அதிகரிக்க உதவியுள்ளது என தெரிவித்தார்.

செயற்குழு கூட்டம் முடிந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி திடீரென அங்கு வந்து சரத் பவாரைச் சந்தித்துப் பேசினார்.

Tags:    

Similar News