இந்தியா

திருப்பதியில் 25 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

Published On 2025-06-22 10:13 IST   |   Update On 2025-06-22 10:13:00 IST
  • பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் திணறினர்.
  • கோவிலில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டருக்கு மேல் உள்ள ஷீலா தோரணம் வரை பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருந்தனர்.

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வந்தது.

இன்று பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் திணறினர்.

பக்தர்கள் காத்திருப்பு அறைகள் அனைத்தும் நிரம்பி வழிந்தது. இதனால் கோவிலில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டருக்கு மேல் உள்ள ஷீலா தோரணம் வரை பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருந்தனர்.

திருப்பதியில் நேற்று 90,087 பேர் தரிசனம் செய்தனர். 41891 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 4.30 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 25 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News