இந்தியா

சுப்ரீம் கோர்ட்டுக்கு 3 புதிய நீதிபதிகள் நியமனம்

Published On 2025-05-29 23:47 IST   |   Update On 2025-05-29 23:47:00 IST
  • கொலீஜியம் பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
  • ஜனாதிபதி முர்மு இந்த 3 பேரையும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக நியமித்தார்.

புதுடெல்லி:

கர்நாடக ஐகோர்ட் தலைமை நீதிபதி என்.வி.அஞ்சரியா, கவுகாத்தி ஐகோர்ட் தலைமை நீதிபதி விஜய் விஷ்னோய், மும்பை ஐகோர்ட் நீதிபதி ஏ.எஸ்.சந்ருகர் ஆகிய 3 பேரையும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக நியமிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கடந்த 26-ம் தேதி கொலீஜியம் பரிந்துரை செய்தது.

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான கொலீஜியம் செய்த இந்தப் பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு இந்த 3 பேரையும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக நியமித்து உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News