இந்தியா

முன்னாள் முதல் மந்திரியின் அண்ணி பா.ஜ.க.வில் சேர்ந்தார்

Published On 2024-03-19 09:11 GMT   |   Update On 2024-03-19 09:12 GMT
  • ஹேமந்த் சோரன் மனைவியை முதல் மந்திரி ஆக்குவதற்கு அண்ணி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
  • 2019 தேர்தலுக்குப் பிறகு தான் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டேன் எனவும் குற்றம் சாட்டினார்.

புதுடெல்லி:

ஜார்க்கண்ட் மாநில முதல் மந்திரி ஹேமந்த் சோரன் மீதான நில மோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அப்போது சோரனின் மனைவி கல்பனாவை முதல் மந்திரி ஆக்குவதற்கு ஹேமந்த் சோரனின் அண்ணியான சீதா சோரன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

2019 தேர்தலுக்குப் பிறகு தான் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டேன். வளர்ந்து விட்ட தனது 2 மகள்களையும் ஹேமந்த் சோரன் கண்டு கொள்வதில்லை என சீதா சோரன் குற்றம் சாட்டினார்.

இதற்கிடையே, சீதா சோரன் கட்சியில் இருந்து திடீரென விலகினார்.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் சீதா சோரன் தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார். அவரை பாஜகவினர் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News